search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகன் பலி"

    திருச்செந்தூர் அருகே மகன் இறந்த துக்கத்தில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே உள்ள என்.முத்தையாபுரம் மேல தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மனைவி இசக்கியம்மாள் (வயது52). இவர்களுக்கு 3 மகன்கள். இதில் 2-வது மகன் கணேஷ் என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். 

    அதில் இருந்து இசக்கியம்மாள் மன வேதனையில் இருந்தார். இந்த நிலையில் நேற்று இசக்கியம்மாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி திருச்செந்தூர் தாலுகா போலீசுக்கு தகவல் கொடுக்கபப்ட்டது. 

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இசக்கியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வந்தவாசியில் மின்சாரம் தாக்கி தாய், பிளஸ்-2 மாணவன் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த செம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 38). கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி சுமதி (32). இவர்களது ஒரே மகன் மணிகண்டன் (16). அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர்கள், கறவை மாடுகளையும் பராமரித்து வந்தனர்.

    இந்த நிலையில், கார்த்திக் வேலை நிமித்தமாக நேற்று வெளியூர் சென்றிருந்தார். வீட்டு அருகே அத்திப்பாக்கம் சாலையில் உள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த தங்களது கறவை மாடுகளை வீட்டிற்கு ஓட்டி வருவதற்காக நேற்றிரவு 7 மணியளவில் தாய் சுமதி, மணிகண்டன் சென்றனர்.

    அப்போது, வயல் வரப்பில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை கவனிக்காமல் இருவரும் மிதித்தனர். இதில் மின்சாரம் தாக்கியதில் தாயும், மகனும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். இரவு நேரம் என்பதால் 2 பேரும் பலியான தகவல் அப்பகுதி மக்களுக்கு தெரியவில்லை.

    இன்று காலை அந்த வழியாக சென்ற சிலர், சுமதியும், அவருடைய மகனும் மின்சாரம் தாக்கி இறந்துகிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கிராம மக்கள் ஏராளமானோர் சம்பவ இடத்தில் திரண்டு உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

    தகவலறிந்ததும், வந்தவாசி வடக்கு இன்ஸ்பெக்டர் கவுரி, சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே, மின்வாரிய நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள், விவசாயிகள் வந்தவாசி-திண்டிவனம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    டி.எஸ்.பி. பொற்செழியன் மற்றும் போலீசார் சமரசம் செய்தனர். இதையடுத்து, மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதன்காரணமாக, ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



    சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாசா சிக்னல் அருகே தண்ணீர் லாரி மோதிய விபத்தில் தாய், மகன் பலியாயினர்.
    சென்னை:

    சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் பிளாசா சிக்னல் அருகே இன்று மதியம் தனியார் ஓட்டலுக்கு சொந்தமான தண்ணீர் லாரி வேகமாக சென்றது.

    அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிளில் மீது லாரி மோதியது. அதில் பயணம் செய்த 2 பேர் லாரியின் அடியில் சிக்கி உடல் நசுங்கி பலியானார்கள்.

    அவர்களது பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. இருவரும் தாய்-மகன் என்று கூறப்படுகிறது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    அவினாசி அருகே விபத்தில் ஒரே மகனை பறிகொடுத்ததால் தாய் - தந்தை வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

    அவினாசி:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படை ஈகாட்டூர் எலந்த குட்டை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். விவசாயி. இவரது மகன் நிஷாந்த் (22). டிப்ளமோ கம்ப்யூட்டர் முடித்துள்ளார். இவரது நண்பர் கிருபாகரன் (20). ஊட்டி பைக்காரா மின்வாரிய குடியிருப்பை சேர்ந்தவர்.

    நிஷாந்தும், கிருபாகரனும் நேற்று மோட்டார் சைக்கிளில் கோவை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வந்தனர். இங்கு வேலை முடிந்து அவர்கள் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

    அவினாசி அருகே உள்ள நாதம்பாளையம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ரோடு ஓரம் சரக்கு ஆட்டோ நின்று கொண்டிருந்தது.

    திடீரென மோட்டார் சைக்கிள், சரக்கு ஆட்டோ மீது மோதியது. இதில் நிஷாந்த், கிருபாகரன் ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்தனர்.

    நிஷாந்த் பெற்றோருக்கு ஒரே மகன் ஆவார். அவர் பலியான தகவல் கிடைத்ததும் அவரது தந்தை சக்தி வேல், தாய் சுதா ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்கள் சோகத்துடன் தனது மகன் உடல் வைக்கப்பட்டுள்ள அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். மனமுடைந்து காணப்பட்ட அவர்கள் குளிர்பானத்தில் வி‌ஷம் கலந்து குடித்தனர்.

    இதில் இருவரும் மயங்கி விழுந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி சக்திவேல், சுதா ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

    இது குறித்து அவினாசி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்தில் மகனை பறி கொடுத்த பெற்றோர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

    ×